சென்னையில் இன்று (புதன்கிழமை) புதிதாக 1,276 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி, தமிழகத்தில் புதிதாக 2,174 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,276 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 162 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மாவட்டவாரியாக பாதித்தோர் பட்டியல்: இங்கே கிளிக் செய்யவும்..