ராமேஸ்வரம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தங்கம் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரிடம் விசாரணை
ராமேஸ்வரம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தங்கம் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரிடம் வருவாய் புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


ராமேஸ்வரம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தங்கம் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரிடம் வருவாய் புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமநாத மாவட்டம், ராமேஸ்வரம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தங்கம் கடத்துவதாக வந்த தகவலை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் நேற்று இரவு மன்னார் வளைகுடா பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக அதிவேகமாக சென்ற ஒரு படகை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். படைகில் இருந்த இரண்டு நபர்களை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில் படகில் இருந்து சுமார் 15 கிலோ தங்கத்தை மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வீசியதாக தகவல் அளித்தனர். இதையடுத்து இன்று காலை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் அந்த தங்கத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...