ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ராமேஸ்வரம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தங்கம் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரிடம் விசாரணை

ராமேஸ்வரம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தங்கம் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரிடம் வருவாய் புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

News image
Updated On :4 மார்ச் 2020, 11:30 am

DIN

ராமேஸ்வரம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தங்கம் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரிடம் வருவாய் புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Story image

ராமநாத மாவட்டம், ராமேஸ்வரம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தங்கம் கடத்துவதாக வந்த தகவலை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் நேற்று இரவு மன்னார் வளைகுடா பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். 

Story image

அப்போது அந்த வழியாக அதிவேகமாக சென்ற ஒரு படகை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். படைகில் இருந்த இரண்டு நபர்களை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் படகில் இருந்து சுமார் 15 கிலோ தங்கத்தை மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வீசியதாக தகவல் அளித்தனர். இதையடுத்து இன்று காலை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் அந்த தங்கத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.