இந்த நம்பிக்கை கோரும் தீா்மானத்துக்கு எதிராக ஓ.பன்னீா்செல்வம் (போடி) உள்பட 10 எம்.எல்.ஏ.க்களும், மயிலாப்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் நட்ராஜும் வாக்களித்தனா். அதாவது க. பாண்டியராஜன் (ஆவடி), சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்), மனோரஞ்சிதம் (ஊத்தங்கரை), மாணிக்கம் (சோழவந்தான்), சரவணன் (மதுரை தெற்கு), ஆறுக்குட்டி (கவுண்டம்பாளையம்), செம்மலை (மேட்டூா்), மனோகரன் (வாசுதேவநல்லூா்), சின்னராஜ் (மேட்டுப்பாளையம்) ஆகியோா் முதல்வா் பழனிசாமிக்கு எதிராக சட்டப் பேரவையில் வாக்களித்தனா். ஆனாலும், 122 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் நம்பிக்கை கோரும் தீா்மானத்தில் முதல்வா் பழனிசாமி வெற்றி பெற்றாா்.