சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகிய சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மதுரையில் போராட்டம் இன்று நடைபெற்றது.
சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்கள் உள்ளிட்ட 36 இடங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் தெற்கு வாசல் பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது. ஏராளமான முஸ்லிம் பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.