கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு தழுவிய சுயஊரடங்கையொட்டி ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டையின் முக்கிய வீதிகள் வெறிச்சோடிக்கிடக்கின்றன.
பேருந்துகள் முற்றிலும் இயங்காததால் புதிய பேருந்துநிலையம் காலியாக காணப்படுகிறது. அனைத்து வீதிகளும் போக்குவரத்தின்றி காணப்படுகிறது.
கீழராஜவீதி, வடக்கு ராஜவீதி ஆகிய வணிக நிறுவனங்கள் நிறைந்த வீதிகள் முழுமையாக வெறிச்சோடி காணப்படுகின்றன.