மதுரையில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருபவர்களில் மேலும் இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருபவர்களில் மேலும் இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை அண்ணா நகர் நெல்லை வீதியைச் சேர்ந்த 54 வயது நபர் கரோனா வைரஸ் நோய் காரணமாக இறந்தார் தாய்லாந்தில் இருந்து வந்தவர்கள் மூலமாக அவருக்கு கரோனா வைரஸ் பரவியதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரது மனைவி இரு மகன்கள் ஆகியோரும் கரோனா பாதிப்புக்கு ஆளாகி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த 60 வயது நபர் கரோனா வைரஸ் பாதிப்பு ஆகி சிகிச்சை பெற்று வந்தார். அவர் மதுரை கேகே நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு வார்டுக்கு திங்கள்கிழமை இரவு மாற்றப்பட்டார். இதற்கிடையே மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த 40 வயது நபர் தபால் தந்தி நகரைச் சேர்ந்த 45 வயது நபர் ஆகியோர் கரோனா வைரஸ் அறிகுறிகள் சேர்க்கப்பட்டனர்.
அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் தில்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து மதுரையில் கரோனா வைரஸ் பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...