டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மதுரையில் கரோனா சிறப்பு மருத்துவமனை தயார்

கரோனா வைரஸ் நோய் பாதிப்புக்கு ஆளாகும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி மருத்துவமனை மதுரையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:19 pm

DIN

கரோனா வைரஸ் நோய் பாதிப்புக்கு ஆளாகும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி மருத்துவமனை மதுரையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உடன் இணைந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கடந்த ஓராண்டுக்கு முன்பு திறக்கப்பட்டது. ரூபாய் 300 கோடி செலவில் நவீன உபகரணங்களுடன் கட்டப்பட்ட இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். 

இங்கு சிறுநீரக மருத்துவம், சிறுநீரக அறுவை சிகிச்சை, நரம்பியல் மருத்துவம், நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவுகள் இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் செயல்பட்டு வந்தன. இந்நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் கரோனா சிகிச்சைக்கான தனி மருத்துவமனைகள் திறக்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது

இதன்படி சென்னை வேலூர் திருச்சி உள்ளிட்ட நகரங்களில் சிகிச்சை மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன.  இதன் தொடர்ச்சியாக மதுரையில் செயல்பட்டுவந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையானது கரோனா சிகிச்சை மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.

இங்கு செயல்பட்டுவந்த 4 சிகிச்சை பிரிவுகளும் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு திங்கட்கிழமை இரவு மாற்றப்பட்டன. அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஏற்கெனவே கரோனா நோயாளிகளுக்கான பிரத்தியேக வார்டு உள்ளது. அதில் எட்டு படுக்கைகள் உள்ளன. மேலும் 10 படுக்கைகளுடன் தனி வார்டும் அமைக்கப்பட்டு வருகிறது.

அதேபோல மதுரையை அடுத்த ஆஸ்டின் பட்டியில் உள்ள காசநோய் மருத்துவமனையிலும் கரோனா கிச்சைக்கான வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையானது 400 படுக்கைகளுடன் கரோனா சிகிச்சை மருத்துவமனையாக மாற்றப்பட்டு உள்ளது. தென் மாவட்டங்களுக்கான கரோனா மருத்துவமனையாக இது செயல்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.