கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளுக்காக தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ரூ. 5 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வங்கியின் தலைமைச் செயல் அலுவலர் மற்றும் நிர்வாக இயக்குநர் கேவி ராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், தேச நலன் கருதி கரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ.5 கோடி நிதியுதவி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.