திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கரோனாவால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி நபருக்கு கிருஷ்ணகிரியில் சிகிச்சை

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி நபருக்கு கிருஷ்ணகிரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

News image
Updated On :20 மே 2020, 12:48 pm

DIN

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி நபருக்கு கிருஷ்ணகிரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

தூத்துக்குடி மாவட்டம், மாவட்டம் சாத்தான் குளத்தைச் சேர்ந்தவர் 32 வயது நபர். இவர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இந்த ஊரடங்கால் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்து வந்த இவர், கடந்த வாரம் மும்பையிலிருந்து புறப்பட்டு,  கடந்த கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி சோதனைச் சாவடிக்கு கடந்த 17-ம் தேதி வந்தார். 

அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. முடிவு வருவதற்குள் இவர் கிருஷ்ணகிரியைக் கடந்து காவேரிப்பட்டினம் வழியாகச் சென்றார். அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு  கரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதிப்பு பரிசோதனைக்காக ரத்தம் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

இத்தகைய நிலையில் பரிசோதனை முடிவுகள் வெளியானதில் அவருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதிப்பு உறுதியானது. அவர் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். அவருக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்புக்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை எனத் தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 20 பேர் காரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு 18 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திருப்பினர். தற்போது இரண்டு பேர் மட்டுமே ஓசூர் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.