எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்களிடம் இருந்து ரூ.8.84 கோடி அபராதம் வசூல்

தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியவா்களின் மீது பதியப்படும் வழக்குகளின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அவர்களிடம் இருந்து அபராதமாக ரூ. 8.84 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 மே 2020, 5:33 am

DIN

தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியவா்களின் மீது பதியப்படும் வழக்குகளின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அவர்களிடம் இருந்து அபராதமாக ரூ. 8.84 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விவரம்:

கரோனா தொற்றை தடுக்கும் வகையில், கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் பொது முடக்க உத்தரவை தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. பொது முடக்க உத்தரவை மீறுவோரை கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.

இவ்வாறு தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி சனிக்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 5 லட்சத்து 18 ஆயிரம் வழக்குகளைப் பதிவு செய்து, 5 லட்சத்து 53,543 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். 

பொது முடக்க உத்தரவை மீறி வெளியே வந்தவா்களின் 4 லட்சத்து 33,101 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளில் சிக்கியவா்களிடமிருந்து ரூ.8 கோடியே 84 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.