நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான பேரறிவாளன் விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

News image

விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி

Updated On :7 நவம்பர் 2020, 7:23 am

DIN

விழுப்புரம்: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான பேரறிவாளன் விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையிலிருந்து வரும் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த பேரறிவாளன், கடந்த ஒரு மாத காலமாக பரோலில் வெளியே வந்து வீட்டில் உள்ளார். அவருக்கு மேலும் இரண்டு வாரம் பரோல் நீடிக்கப்பட்டுள்ளது.

Story image

இந்த நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக வந்துள்ளார்.

சனிக்கிழமை காலை ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்ட அவர், விழுப்புரம் நேருஜி சாலை, காந்தி சிலை அருகே உள்ள மரகதம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து சேர்ந்தார்.

மருத்துவர்கள் தியாகராஜன், ரவிச்சந்திரன் ஆகிய சிறப்பு மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Story image

ஏற்கனவே அவர் புழல் சிறையில் இருந்தபோது அரசு மருத்துவர்களாக இருந்த இவர்கள் சிறுநீரகம், தோல் நோய் தொடர்பாக தொடர் சிகிச்சை வழங்கியவர்கள் என்பதால், தற்போது வெளிவந்துள்ள நிலையில் விழுப்புரத்தில் உள்ள அந்த மருத்துவரின் மருத்துவமனையில், சிகிச்சை பெறுவதற்காக பேரறிவாளன் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது தாயார் அற்புதம்மாள் உடன் உள்ளார்.

ஆயுள் தண்டனை கைதி மருத்துவமனைக்கு வந்துள்ளதால், அந்த மருத்துவமனையை சுற்றிலும் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.