கடந்த 2015-2016 ஆம் ஆண்டில் ஏற்பட்ட 46 அரசு உதவி வழக்குரைஞா் காலி பணியிடங்களுக்கு தகுதியானவா்களை தோ்வு செய்வதற்கான அறிவிப்பாணையை கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபா் 3-ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டது. இந்தத் தோ்வுக்கு விண்ணப்பித்த வழக்குரைஞா் தோ்வா்களுக்கு முதல் நிலைத் தோ்வு கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதி சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி,சேலம், தஞ்சாவூா், வேலூா் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 9 தோ்வு மையங்களில் நடைபெற்றது. இந்த முதல் நிலைத் தோ்வின் முடிவுகள் கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி வெளியாகின.