பெற்றோர்களின் கருத்து அடிப்படையில் பள்ளி திறப்பு குறித்து முடிவு: முதல்வர் பழனிசாமி
பெற்றோர்களிடம் இருந்து பெற்ற கருத்துகளின் அடிப்படையில் பள்ளி திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.


சென்னை: பெற்றோர்களிடம் இருந்து பெற்ற கருத்துகளின் அடிப்படையில் பள்ளி திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நலத்திட்டப் பணிகளை தொடக்கி வைக்க முதல்வர் பழனிசாமி இன்று அந்த மாவட்டத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடக்கி வைத்த பின், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.
இதையும் படிக்கலாமே.. 'பிகாரில் நிதிஷ் குமாரின் வெற்றியை உறுதி செய்தது இவர்கள்தானாம்'
அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து சிலர் அச்சம் தெரிவித்துள்ளனர். கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து விடுமோ என்று பெற்றோர்கள் கருதுகிறார்கள். பெற்றோர்களிடமிருந்து பெற்ற கருத்துகளின் அடிப்படையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும்.
இதையும் படிக்கலாம்.. பள்ளி, கல்லூரிகளைத் திறக்க பெரும்பாலான பெற்றோர் எதிர்ப்பு: தமிழக அரசு தகவல்
தூத்துக்குடி துறைமுகத்தை நவீனமயமாக்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம். விவசாயம் பற்றி தெரியாத ஸ்டாலினுக்கு எப்படி போலி விவசாயம், உண்மையான விவசாயம் பற்றி தெரியும். எனக்கு விவசாயம் தெரியும், ஸ்டாலினுக்கு என்ன தெரியும்?
விவசாயிகள் குறித்து விவசாயியான என்னிடம் கேட்டால் தெரியும், எல்லாவற்றையும் திமுக செய்துவிட்டு பழியை மட்டும் அதிமுக மீது போடுகிறது என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...