47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கிணற்றில் விழுந்த யானை மீட்பு

தருமபுரி அருகே கிணற்றில் விழுந்த யானை 16 மணிநேரப் போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்டது.

News image
Updated On :19 நவம்பர் 2020, 4:03 pm

DIN

தருமபுரி அருகே கிணற்றில் விழுந்த யானை 16 மணிநேரப் போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே 50 அடி விவசாய கிணற்றில் 12 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று இன்று விழுந்தது. உடனே இதுகுறித்து, வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு யானை மீட்கும் பணி நடைபெற்று வந்தது.  

யானையை மீட்கும் பணியை தருமபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா நேரில் பார்வையிட்டார். 50 அடி ஆழ கிணற்றில் விழுந்த யானையை மீட்பதற்காக இரண்டு முறை மயக்க ஊசி செலுத்தப்பட்டது. 

மயக்க ஊசி செலுத்தி மீட்கும்போது கயிறு நழுவியதால் கிணற்றின் பக்கவாட்டில் யானை விழுந்தது. சுமார் 13 மணிநேர போராட்டத்துக்கு பின் கிரேன் உதவியுடன் வனத்துறை, தீயணைப்புத்துறை வீரர்கள் யானையை பத்திரமாக மீட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.