நாகை துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில், நாகை துறைமுக அலுவலகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு திங்கள்கிழமை காலை ஏற்றப்பட்டது.


தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில், நாகை துறைமுக அலுவலகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு திங்கள்கிழமை காலை ஏற்றப்பட்டது.
தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் சனிக்கிழமை உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. இந்தப் புயலுக்கு நிவர் என ஈரான் பெயரிட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் சென்னையில் தென்கிழக்கில் 740 கிலோமீட்டரில் நிலைகொண்டுள்ள இந்தப் புயல் காரைக்காலுக்கும்-மாமல்லபுரத்துக்கும் இடையே நவ. 25-ஆம் தேதி கரையைக் கடக்க வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் நாகை துறைமுக அலுவலகத்தில் உள்ளூர் முன்னறிவிப்பாக திங்கள்கிழமை காலை 7.15 மணிக்கு 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. திடீர் காற்றோடு மழை பெய்யக்கூடும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...