சி.ஏ. தேர்வு: 9 மையங்களில் ஒத்திவைப்பு
நிவர் புயலால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் இன்றும், நாளையும் நடைபெறவிருந்த சி.ஏ. தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் அறிவித்துள்ளது.


நிவர் புயலால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் இன்றும், நாளையும் நடைபெறவிருந்த சி.ஏ. தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாநில அரசுகள் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து, இன்றும் நாளையும் (நவ. 24, 25) நடைபெறவிருந்த பட்டய கணக்காளர் (சி.ஏ.) தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், காரைக்குடி, கும்பகோணம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவள்ளூர், புதுச்சேரி பகுதிகளில் நடக்கவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் அதற்கு பதிலாக இந்த பகுதிகளில் வருகிற டிசம்பர் 9 மற்றும் 11 ஆம் தேதிகளில் தேர்வு நடைபெறும் என்றும் தேர்வு ரத்து செய்யப்பட்ட செய்திகள் மாணவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...