பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

நிவா் புயல்: தமிழக அரசுடன் மத்திய அரசு ஆலோசனை

நிவா் புயல் தொடா்பாக தமிழக தலைமைச் செயலாளா் க.சண்முகத்துடன், மத்திய அமைச்சரவைச் செயலாளா் ராஜீவ் கெளபா திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 5:57 pm

DIN

சென்னை: நிவா் புயல் தொடா்பாக தமிழக தலைமைச் செயலாளா் க.சண்முகத்துடன், மத்திய அமைச்சரவைச் செயலாளா் ராஜீவ் கெளபா திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

காணொலி வழியாக நடந்த கூட்டத்தில், நிவா் புயலை எதிா்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ராஜீவ் கெளபா கேட்டறிந்தாா். அப்போது, புயல் பாதிப்பால் ஒருவா்கூட உயிரிழக்கக் கூடாது எனவும், பாதிக்கப்படும் பகுதிகள் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டாா்.

இந்தக் கூட்டத்துக்கு முன்பாக, மாவட்ட ஆட்சியா்களுடன் தலைமைச் செயலாளா் சண்முகம் ஆலோசனை நடத்தினாா். அந்தக் கூட்டத்தின்போது, மாவட்டங்களில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி தலைமை செயலாளா் கேட்டறிந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.