வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நிவர் புயல்: தமிழக, புதுச்சேரி முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியிடம் கேட்டறிந்தார். 

News image
பிரதமர் மோடி
Updated On :24 நவம்பர் 2020, 5:43 am

DIN

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியிடம் தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். 

நிவர் புயலுக்கு தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த அவர், தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது என முதல்வர் பழனிசாமியிடம் உறுதி அளித்துள்ளார். 

அதேபோன்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியிடமும் பிரதமர் மோடி பேசியுள்ளார். புதுச்சேரிக்கு தேவையான உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று கூறியுள்ளார். 

மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் பாதுகாப்புக்கு இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.