வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு சீர்காழி வந்தது

வங்கக் கடலில் உருவான நிவர் புயல் நாளை மகாபலிபுரம்- காரைக்கால் இடையே கரையைக் கடக்க உள்ளது.

News image
தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு சீர்காழி வந்தது
Updated On :24 நவம்பர் 2020, 7:56 am

DIN

வங்கக் கடலில் உருவான நிவர் புயல் நாளை மகாபலிபுரம்- காரைக்கால் இடையே கரையைக் கடக்க உள்ளது.

முன்னெச்சரிக்கையாக, மீட்புப் பணிகளில் ஈடுபட சென்னையிலிருந்து சீர்காழிக்கு 35 பேர் கொண்ட  பேரிடர் மீட்பு  குழுக்கள் தற்போது சீர்காழி காவல் நிலையத்திற்கு வந்து உள்ளனர்.

இவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து கொள்ளிடம் ஆற்று கரையோரமும், பழையாறு கடற்கரை பகுதிக்கும் செல்கின்றனர்.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி திங்கள்கிழமை வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் பின்னா், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாறியது. இது, செவ்வாய்க்கிழமை காலை புயலாக வலுவடைந்தது.

மேலும், இந்தப் புயல் தீவிர புயலாக மாறி, காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகே நவம்பா் 25-ஆம் தேதி பிற்பகலில் கரையை கடக்கவுள்ளது. 

அப்போது, மணிக்கு 100 கி.மீ. முதல் 110 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 120 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.