ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

நிவர் புயல்: தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள் ரத்து

நிவர் புயல் காரணமாக நாளை ஒருநாள் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களும்  செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :24 நவம்பர் 2020, 10:16 am

DIN

நிவர் புயல் காரணமாக சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களும் நாளை (புதன்கிழமை) செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நிவர் புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெற்று மகாபலிபுரம் -காரைக்கால்  இடையே கரையைக் கடப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இரு மார்க்கத்திலும் செல்லும் 24 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த ரயில்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் முழுவதுமாக வங்கிக்கணக்கில் திருப்பிச் செலுத்தப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

மொத்தமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் 30 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.