வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சென்னையில் பெய்த மழையின் அளவு: வட்டம் வாரியாக

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியிருக்கும் தீவிர புயல் காரணமாக சென்னையில் கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

News image
சென்னையில் பெய்த மழையின் அளவு: தாலுகா வாரியாக
Updated On :25 நவம்பர் 2020, 5:49 am

DIN


சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியிருக்கும் தீவிர புயல் காரணமாக சென்னையில் கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. தரைதளத்தில் இருந்த பல வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். பல முக்கிய சாலைகளிலும் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

Story image

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் பெய்த மழையின் அளவை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அதில் அதிகபட்சமாக, சென்னை புரசைவாக்கத்தில் 148.20 மி.மீ. மழையும், சோழிங்கநல்லூரில் 145 மி.மீ. மழையும், கிண்டியில் 143.20 மி.மீ. மழையும், மயிலாப்பூரில் 140.60 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையில் ஒட்டுமொத்தமாக 1,402.90 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. ஆனால் இந்த காலக்கட்டத்தில் பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவு 127.53 மி.மீ. ஆகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.