பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

செம்பரம்பாக்கம் செல்கிறார் முதல்வர் பழனிசாமி

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நேரில் சென்று பார்வையிடவுள்ளார்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:57 pm

DIN


செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நேரில் சென்று பார்வையிடவுள்ளார்.

நிவர் புயல் எதிரொலியாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. நீர்மட்டம் 22 அடியை நெருங்குவதால் நண்பகல் 12 மணிக்கு ஏரியிலிருந்து 1,000 கன அடி நீர் திறந்து விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குன்றத்தூர், நத்தம், காவலூர், திருநீர்மலை, திருமுடிவாக்கம், வழுதியம்பேடு  உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதேபோன்று அடையாறு ஆற்றின் இருபுறமும் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் முதல்வர் பழனிசாமி செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேரில் சென்று பார்வையிடவுள்ளார்.

இதனிடையே செம்பரம்பாக்கம் ஏரியில் 20 செ.மீ. வரை மழை பெய்யக் கூடும் என மத்திய நீர்வளத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.