ஹைதராபாத் - தாம்பரம் இடையிலான ரயில் சேவை மீண்டும் தொடக்கம்
நிவர் புயல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஹைதராபாத் - தாம்பரம் இடையிலான ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


ஹைதராபாத்: நிவர் புயல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஹைதராபாத் - தாம்பரம் இடையிலான ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், ஹைதராபாத் - தாம்பரம் - ஹைதராபாத் இடையேயான சிறப்பு ரயில் நவம்பர் 26-ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது. நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டிருந்த இந்த ரயில் சேவை, பழைய அட்டவணைப்படியே இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக இன்று இயக்கப்பட இருந்த 7 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...