டிச.2-ல் அதிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாடு, கேரளத்தில் டிசம்பர் 2 ஆம் தேதி அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
டிச.2-ல் அதிக கனமழைக்கு வாய்ப்பு
டிச.2-ல் அதிக கனமழைக்கு வாய்ப்பு



புதுதில்லி:  தமிழ்நாடு, கேரளத்தில் டிசம்பர் 2 ஆம் தேதி அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்கிழக்கு வங்கக்கடல், பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் மற்றொரு புதிய குறைந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி சனிக்கிழமை உருவானது. இது அடுத்த 36 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். 

தென்கிழக்கு வங்கக் கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகரும். தாழ்வு மண்டலம் வலுவடைந்து டிசம்பர் 2 ஆம் தேதி தென் தமிழகத்தின் கடற்கரையை நெருக்கும். 

இதனால், தமிழகம் மற்றும் கேரளத்தில் அன்று அதிக கனமழை பெய்யக்கூடும் என்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது காற்றழுத்தத்தாழ்வு மண்டலாக மாறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று இந்தி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com