ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

'தில்லியில் அக். 31 வரை பள்ளிகள் திறக்கப்படாது'

தில்லியில் கரோனா பெருந்தொற்று காரணமாக அக்டோபர் 31-ஆம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

News image

தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா

Updated On :4 அக்டோபர் 2020, 9:06 am

தில்லியில் கரோனா பெருந்தொற்று காரணமாக அக்டோபர் 31-ஆம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 5-ஆம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தில்லியில் அனைத்துவிதமான பள்ளிகளும் அக்டோபர் 31-ஆம் தேதி வரை திறக்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.
 
கரோனா பெருந்தொற்று காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

கரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் சுகாதாரத்துறை ஈடுபட்டு வரும் நிலையில், ஊரடங்கில் ஒருசில தளர்வுகளும் அளிக்கப்பட்டன.

மத்திய அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி அக்டோபர் 5-ஆம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று தில்லி அரசு அறிவித்திருந்தது.

எனினும் தில்லியில் கரோனா பரவல் விகிதம் குறையாததால், அக்டோபர் 31-ஆம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.