47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சசிகலாவின் சொத்துகள் முடக்கம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு சொந்தமான சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.

News image
சசிகலாவின் சொத்துகள் முடக்கம்
Updated On :7 அக்டோபர் 2020, 10:30 am

DIN


சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோர் பெயர்களில் இருக்கும் சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.

பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் சசிகலா உள்பட மூன்று பேரின் பெயர்களில் உள்ள சுமார் 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுதாவூர் பங்களா, கொடநாடு பங்களா உள்ளிட்ட சொத்துகள் முடக்கப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மேலும், சொத்துகள் முடக்கம் தொடர்பான நோட்டீஸை சம்பந்தப்பட்ட இடங்களில் ஒட்டுவதற்கான ஏற்பாடுகளையும் வருமான வரித்துறை மேற்கொண்டுள்ளது.

கடந்த மாதம் போயஸ் தோட்டம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த பங்களா உள்பட சசிகலாவுக்கு சொந்தமான ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரித் துறை முடக்கி நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சசிகலா உள்பட மூன்று பேரின் பெயர்களில் இருக்கும் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தண்டனைக் காலம் முடிவடைந்து அவர் அடுத்தாண்டு வெளிவரவுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.