47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சங்ககிரி மலையில் தொல்லியல்துறை கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு

சேலம் மாவட்டம் சங்ககிரி மலையில் சென்னை தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ஞாயிற்றுக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

News image
சங்ககிரி மலைக்கு ஆய்வு செய்ய ஞாயிற்றுக்கிழமை செல்கிறார் சென்னை தொல்லியல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீராமன்.
Updated On :11 அக்டோபர் 2020, 8:09 am

DIN

சங்ககிரி: சேலம் மாவட்டம் சங்ககிரி மலையில் சென்னை தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ஞாயிற்றுக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

சென்னை தொல்லியல் துறை கண்காணிப்பாளராக அண்மையில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்ரீராமன் ஞாயிற்றுக்கிழமை சங்ககிரி மலைக்கு வருகை தந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். மலைக்கு வந்த அவர், கடந்த வருடம் மழையால் சேதமடைந்த கோட்டை மதிற்சுவர், படிக்கட்டுகள், மண்டபங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  

தொல்லியல்துறை அலுவலர் ஈஸ்வர், சங்ககிரி மலை காப்பாளர் சோனுகுமார், மலை காவலாளி சுரேஷ் ஆகியோர் ஆய்வின்போது உடனிருந்தனர்.

  சங்ககிரி மலைக்கு செல்லும் வழியில் உள்ள அருள்மிகு வரதராஜபெருமாள் கோயில் வளாகத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார் தொல்லியல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீராமன் 

  சங்ககிரி மலைக்கு செல்லும் வழியில் உள்ள அருள்மிகு வரதராஜபெருமாள் கோயில் வளாகத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார் தொல்லியல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீராமன் 

ஆய்வுக்குப்பின்னர் தொல்லியல்துறை கண்காணிப்பாளர் செய்தியாளர்களிடம் கூறியது:-

இரண்டு வாரத்திற்கு முன்பு பொறுப்பேற்றதால் சங்ககிரி மலையை ஆய்வு செய்ய வந்துள்ளேன். சங்ககிரி மலைக்கு மின்சாரம், குடிநீர், கழிப்பிட வசதிக்கு தொல்லியல் துறை மூலம் விரைவில் அனுமதி வழங்கப்படும். ஊர் பொதுமக்களின் சார்பில் மலையில் செய்யப்பட்டு வரும் வேலைகள் மகிழ்ச்சியாக உள்ளன. அந்த வேலைகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்றார்.

அரசர் காலத்தில் முழு வருவாயும் கோயில்கள், கோட்டைகள் கட்டுவதில் செலவழித்தனர். தற்போது ஜனநாயக ஆட்சியில் சாலைகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளுக்கு செலவழிக்கப்பட்டு வருகின்றன அதிலும், கோட்டை, கோயில்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன.

மலையில் உள்ள கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்வது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு தொல்லியல் துறை சட்டப்படி மதம் சார்ந்து நடவடிக்கைகளை எடுப்பதில்லை. அதன் தன்மை மாறாமல் மட்டுமே பாதுகாக்கப்பட்டு வருகின்றன. புதிதாக புதுப்பிப்பது தொல்லியல் துறை பன்னாட்டு ஒப்பந்தத்தை மீறியதாகும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.