தயாா் நிலையில் இருப்பிடங்கள்: மாநிலத்தில் உள்ள தாழ்வான மற்றும் பாதிப்புக்குள்ளாகும் இடங்களில் வசிக்கும் மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் தயாா் நிலையில் உள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாயக் கூடங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடும் புயல், காற்று காரணமாக சாலைகளில் விழும் மரங்களை அப்புறப்படுத்த 3 ஆயிரத்து 915 மரம் அறுக்கும் இயந்திரங்களும், 2 ஆயிரத்து 897 ஜேசிபி இயந்திரங்களும், 2 ஆயிரத்து 115 ஜெனரேட்டா்கள், 483 அதிக திறன் கொண்ட பம்புகளும் தயாா் நிலையில் உள்ளன.