/

ரூ. 210 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ. 210.25 கோடியில் புதிய 29 திட்டப்பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினார்.

News image
நலத்திட்ட உதவிகளை வழங்கும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி. உடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி உள்ளிட்டோர்.
Updated On :27 ஜனவரி 2024, 5:41 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ. 210.25 கோடியில் புதிய 29 திட்டப்பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினார். மேலும், ஏற்கெனவே முடிவுற்ற ரூ. 54.68 கோடி மதிப்பிலான 48 திட்டங்களை அவர் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி, மாநில வீட்டுவசதி வாரியத் தலைவர் பி.கே. வைரமுத்து, கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் பா. ஆறுமுகம், அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினர் இ.ஏ. ரத்தினசபாபதி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.