தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

தமிழகத்தில் 22 இடங்களில் வருமானவரித் துறை சோதனை

தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 22 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். 

News image
கோப்புப்படம்
Updated On :28 அக்டோபர் 2020, 10:07 am

DIN

தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 22 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். 

கோவையில் மாநகர மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பையா கவுண்டர் என்பவரது வீட்டில் 6 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அங்கு காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து அப்பகுதி திமுகவினர், சோதனை நடைபெறும் இடத்தில் முழக்கமிட்டு வருகின்றனர். 

மேலும், ஈரோட்டைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோன்று சென்னை, திருப்பூரிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக மொத்தமாக தமிழகத்தில் மொத்தமாக 22 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.