விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

விழுப்புரத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் கரும்புக்கான விலை டன் ஒன்றுக்கு ரூ. 5000 வழங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image

விழுப்புரத்தில் கரும்புக்கான விலை டன் ஒன்றுக்கு ரூ.5000 வழங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள்.

Updated On :5 செப்டம்பர் 2020, 7:18 am

DIN

விழுப்புரத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் கரும்புக்கான விலை டன் ஒன்றுக்கு ரூ. 5000 வழங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாநில துணைத்தலைவர் குண்டு ரெட்டியார் தலைமை வகித்தார்.

முன்னாள் எம்எல்ஏ ஆர் ராமமூர்த்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர் டி முருகன், மாநில குழு உறுப்பினர் தாண்டவராயன், மாவட்ட தலைவர் சிவராமன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

ஏராளமான விவசாயிகள் கையில் கரும்பு களுடன் கலந்து கொண்டனர். 

விழுப்புரம் முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலையில் நிலுவைத் தொகை ரூ.40 கோடி வழங்க வேண்டும், கரும்புக்கான விலையை டன் ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும், நிகழாண்டு ஊக்கத் தொகை ரூ.500 நிர்ணயம் செய்ய வேண்டும்,  2017- 18 ஆம் ஆண்டுக்கான கரும்பு பயிர் காப்பீடு நிலுவைத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.