முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு கரோனா இல்லை
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் 14-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், முதல்வர் மற்றும் துணை முதல்வர் உள்பட அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் 14-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், முதல்வர் மற்றும் துணை முதல்வர் உள்பட அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
நேற்று முதல் எம்எல்ஏக்களின் வீடுகளுக்குச் சென்று சுகாதாரத் துறை அதிகாரிகள் கரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கும் நேற்று கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
கரோனா பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகின. அதில், முதல்வர், துணை முதல்வர், அவைத் தலைவர் தனபால் உள்ளிட்டோருக்கு கரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகப் பேரவைக் கூட்டம் 14-ம் தேதி தொடங்கி மூன்று நாள்களுக்கு கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...