விருதுநகர்: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் தேரடி பேருந்து நிறுத்தம் அருகே அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் பெருமன்ற மாநில குழு உறுப்பினர் கௌசிக் ரகு தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் முன்னாள் மாநிலத் துணைத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அழகிரிசாமி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும், நீட் தேர்வினால் உயிரிழந்த 3 மாணவர்களின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர்.
இதில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர் வேதநாயகம், ஒன்றிய துணைச் செயலாளர்கள் பலவேசம்,செல்வம், ஒன்றிய தலைவர் ஆரோன் ராஜாமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


