ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஸ்ரீவில்லிபுத்தூர்: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மற்றும் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்.

News image
ஸ்ரீவில்லிபுத்தூரில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மற்றும் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்.
Updated On :13 செப்டம்பர் 2020, 9:37 am

DIN

விருதுநகர்: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி  ஸ்ரீவில்லிபுத்தூர் தேரடி பேருந்து நிறுத்தம் அருகே அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் பெருமன்ற மாநில குழு உறுப்பினர் கௌசிக் ரகு தலைமை வகித்தார்.  மாவட்ட குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் முன்னாள் மாநிலத் துணைத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அழகிரிசாமி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும், நீட் தேர்வினால் உயிரிழந்த 3 மாணவர்களின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர்.

இதில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர் வேதநாயகம், ஒன்றிய துணைச் செயலாளர்கள் பலவேசம்,செல்வம், ஒன்றிய தலைவர் ஆரோன் ராஜாமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.