பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

சென்னையில் மின்சாரம் தாக்கி சாலையில் நடந்து சென்ற பெண் பலி

சென்னை புளியந்தோப்புப் பகுதியில், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 35 வயது பெண், மின்சாரம் தாக்கிய பலியானார்.

News image

சென்னையில் மின்சாரம் தாக்கி சாலையில் நடந்து சென்ற பெண் பலி

Updated On :14 செப்டம்பர் 2020, 10:47 am


சென்னை: சென்னை புளியந்தோப்புப் பகுதியில், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 35 வயது பெண், மின்சாரம் தாக்கிய பலியானார்.

மின்சாரம் தாக்கிய பலியான பெண், புளியந்தோப்புப் பகுதியை அடுத்த பெரியார் நகரைச் சேர்ந்த எஸ்.அலிமா என்பதும், அவர் வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நாராயணசாமி தெருவில் உள்ள தனது வீட்டுக்கு இன்று காலை 9.20 மணிக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, சாலையில் தேங்கியிருந்த நீரில் கால் வைத்த அலிமா, அதில் கசிந்திருந்த மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அலிமா, உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.