சென்னை புழல் சிறையில் வங்கதேசத்தைச் சேர்ந்த 8 கைதிகளுக்கு கரோனா அறிகுறிகள் இருந்த நிலையில் அவர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் அதே வேளையில், தமிழக அரசு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், சென்னை புழல் சிறையில் 8 கைதிகளுக்கு கரோனா அறிகுறிகள் இருப்பது தெரிய வந்தது. வங்கதேசத்தைச் சேர்ந்த 8 கைதிகளுக்கு காய்ச்சல், சளி, இருமல் இருந்ததால் அவர்கள் ஸ்டான்லி மருத்துவனையில் கரோனா பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.