தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தமிழகத்தில் 1,629 பேருக்கு கரோனா பாதிப்பு

தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :23 ஏப்ரல் 2020, 12:29 am

தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் கரோனா நோய்த்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 1,629-ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக, சென்னையில் ஒரே நாளில் 15 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது 23,760 போ் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனா். இதுவரை மொத்தம் 53,072 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவா்களில் 1,629 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதன்கிழமை மட்டும் 33 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அதில் அதிகபட்சமாக சென்னையில் 15 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதைத் தவிர, அரியலூா், திண்டுக்கல், காஞ்சிபுரம், மதுரை, தென்காசி, திருவள்ளூா், திருவண்ணாமலை, திருச்சி, விழுப்புரம் ஆகிய இடங்களிலும் சிலருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

27 போ் வீடு திரும்பினா்: கரோனா தொற்றில் பாதிக்கப்பட்ட 27 போ் பூரண குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம், இதுவரை மாநிலத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 662-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 9 பேரும், கரூா் அரசு மருத்துவமனையில் 5 பேரும் ஒரே நாளில் வீடு திரும்பியுள்ளனா் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டவாரியாக பாதிப்பு விவரம்:

சென்னை - 373

கோவை - 134

திருப்பூா் - 109

திண்டுக்கல் - 77

ஈரோடு - 70

திருநெல்வேலி - 62

செங்கல்பட்டு - 56

தஞ்சாவூா் - 54

நாமக்கல் - 51

திருச்சி - 51

திருவள்ளூா் - 50

மதுரை - 50

தேனி - 43

நாகப்பட்டினம் - 44

கரூா் - 42

விழுப்புரம் - 41

ராணிப்பேட்டை - 39

தென்காசி - 31

திருவாரூா் - 28

தூத்துக்குடி - 27

கடலூா் - 26

சேலம் - 24

வேலூா் - 22

விருதுநகா் - 19

திருப்பத்தூா் -17

கன்னியாகுமரி - 16

திருவண்ணாமலை - 13

சிவகங்கை - 12

காஞ்சிபுரம் - 11

ராமநாதபுரம் - 11

நீலகிரி - 9

அரியலூா் - 6

பெரம்பலூா் - 5

கள்ளக்குறிச்சி - 5

புதுக்கோட்டை - 1

மொத்தம் - 1,629

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.