தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும்: முதல்வர் மீண்டும் திட்டவட்டம்
தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி மீண்டும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.


சென்னை: தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி மீண்டும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் இன்று வளர்ச்சிப் பணிகள் மற்றும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் நேரில் கேட்டறிந்த பிறகு தமிழக முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, கொடைக்கானலில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அரசுக் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் அமெரிக்காவின் ஆம்வே நிறுவனம் தொழிற்சாலையை தொடங்கியுள்ளது. சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த கொடைக்கானலில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
சுற்றுலா உள்ளிட்ட கரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளை மீட்கெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்.
பாஜகவை விட்டு நயினார் நாகேந்திரன் மீண்டும் அதிமுகவுக்கு வந்தால் சேர்த்துக் கொள்வோம் என்று செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, எஸ்.வி. சேகர் ஏதாவது பேசுவார். ஆனால் வழக்கு என்று வந்தால் ஒளிந்து கொள்வார் என்று மற்றொரு கேள்விக்கு பதிலளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...