ஊத்தங்கரையில் அதிமுக சார்பில் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அதிமுக சார்பில் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஊத்தங்கரையில் அதிமுக சார்பில் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு
ஊத்தங்கரையில் அதிமுக சார்பில் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அதிமுக சார்பில் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ் தலைமை வகித்தார். மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர் நாகராஜ், வடக்கு ஒன்றியச் செயலாளர் வேடி, தெற்கு ஒன்றியச் செயலாளர் ஏசி தேவேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் சாகுல் அமீது, தொகுதிச் செயலாளர் திருஞானம், ஒன்றிய அவைத் தலைவர் கே.ஆர்.சுப்பிரமணி, ஒன்றிய விவசாய அணிச் செயலாளர் வேங்கன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்ச்சியில் எம்ஜிஆர் நூற்றாண்டு அறக்கட்டளைத் தலைவர் மருத்துவர் இளையராஜா, முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் சின்ன பாப்பா, சின்ன தம்பி, முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினர் கண்ணன், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர்கள் சக்திவேல், சிக்னல் ஆறுமுகம், விஜயகுமார் மற்றும் எம்ஜிஆர் கண்ணன், குன்னத்தூர் பெருமாள், தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணைத் தலைவர் தீபக், தொழில்நுட்ப பிரிவு நகரச் செயலாளர் பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com