கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முதல்வர், அமைச்சர்கள் மீதான 97 பக்க ஊழல் புகார் பட்டியல் ஆளுநரிடம் அளிப்பு: மு.க.ஸ்டாலின்

முதல்வர் பழனிசாமி, அதிமுக அமைச்சர்கள் மீதான புகார்கள் அடங்கிய 97 பக்க பட்டியலை ஆளுநரிடம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வழங்கியுள்ளார். 

News image
அதிமுக அரசு மீதான 97 பக்க புகார் பட்டியலை ஆளுநரிடம் அளிக்கிறார் மு.க. ஸ்டாலின்.
Updated On :22 டிசம்பர் 2020, 6:12 am

DIN

முதல்வர் பழனிசாமி, அதிமுக அமைச்சர்கள் மீதான புகார்கள் அடங்கிய 97 பக்க பட்டியலை ஆளுநரிடம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வழங்கியுள்ளார். 

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இன்று காலை 10.30 மணியளவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், 

'2011-16 அதிமுக ஆட்சி ஊழல்கள் குறித்து மக்களுக்குத் தெரியும். நான்கு வருடத்தில்  அனைத்துத் துறைகளிலும் ஊழல் அதிகரித்துள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறையிடம் பல்வேறு புகார்கள் கொடுத்திருக்கிறோம். ஆனால் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. 

முதல்வர் பழனிசாமி மீது உலக வங்கி நிதி தொடர்பான ஊழல், நெடுஞ்சாலைத் துறை தொடர்பான ஊழல், அரிசியை வெளிச்சந்தையில் விற்ற ஊழல், வருமானத்திற்கு மீறிய சொத்துக்குவிப்பு ஊழல், துணை முதல்வர் ஓபிஎஸ் மீதான வருமானத்திற்கு மீறிய சொத்துகுவிப்பு ஊழல் மற்றும் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர் ஆகியோர் மீதான புகார்கள் ஆதாரங்களுடன் ஆளுநரிடம் கொடுத்துள்ளோம். 

Story image

ஏற்கெனவே முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீதான புகாரில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தற்போது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உத்தரவிட ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்பதால் ஆளுநரிடம் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 

மேலும் அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. இன்னும் சில ஆதாரங்கள் கிடைக்க வேண்டியுள்ளது. அதன்பின்னர் இரண்டாம் பாகத்தை ஆளுநரிடம் கொடுப்போம். புகார்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார்' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.