சென்னையில் 1,130 பேர்; பிற மாவட்டங்களில் 3,835 பேர்: மாவட்டவாரியாக கரோனா பாதிப்பு விவரம்
தமிழகத்தில் இன்று சென்னையில் 1,130 பேருக்கும், பிற மாவட்டங்களில் 3,835 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 4,965 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 1,80,643 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் இன்று 1,130 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 88,377 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,835 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டத்தில் 366 பேருக்கும், விருதுநகர் மாவட்டத்தில் 360 பேருக்கும், தூத்துக்குடியில் 269 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 262 பேருக்கும், செங்கல்பட்டில் 256 பேருக்கும் தொற்று உறுதி ஆகியுள்ளது.
மாவட்டவாரியாக விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்..