போஷான் அபியான் ஊட்டச்சத்து இரு வார நிகழ்வு குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடக்கிவைத்தார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூகநலத்துறை சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு போஷான் அபியான் ஊட்டச்சத்து இரு வார நிகழ்வு குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கதிரவன் கொடியசைத்து தொடக்கிவைத்தார்.
தொடர்ந்து உறுதி மொழியினை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா இவ்விழிப்புணர்வு பேரணியில் 200க்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்டனர்.