தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கோயம்பேடு சந்தையோடு தொடர்புடையவர்கள் பரிசோதனைக்கு தாமாக முன்வர வேண்டும்: ஓபிஎஸ் கோரிக்கை

கோயம்பேடு சந்தையோடு தொடர்புடையவர்கள் தாமாக முன்வந்து கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். 

News image

கோயம்பேடு (கோப்புப்படம்)

Updated On :5 மே 2020, 11:49 am

கோயம்பேடு சந்தையோடு தொடர்புடையவர்கள் தாமாக முன்வந்து கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். 

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை பன்மடங்காக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது சென்னை கோயம்பேடு சந்தை. இங்குள்ள வியாபாரிகள் சிலருக்கு தொற்று உறுதியானதை அடுத்து, கோயம்பேடு சந்தையோடு தொடர்புடைய பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த சில தினங்களாக நாள் ஒன்றுக்கு கோயம்பேடு சந்தை தொடர்புடைய நூற்றுக்கணக்கானோருக்கு தொற்று உறுதியாகும் நிலையில், பரவலைக் கட்டுப்படுத்த கோயம்பேடு சந்தை வியாபாரிகள், சந்தைக்கு சென்று வந்தவர்கள், அவர்களோடு தொடர்புடையவர்கள் தாமாக பரிசோதனைக்கு முன்வர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்கள் கேட்டுக்கொண்ட நிலையில் தற்போது தமிழக அரசு சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.