தி.மு.க. எம்.எல்.ஏ. - எம்.பி.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் - நாடாளுமன்ற உறுப்பினர்கள் - சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நாளை (24-05-2020) ஞாயிற்றுக்கிழமை, காலை 10:00 மணி அளவில், எனது தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும்.
அதுபோது, மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.