அதிமுகவின் 49-ஆவது தொடக்கவிழாவையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் துணை முதல்வரும் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீா்செல்வம் கட்சிக் கொடியை ஏற்றினார்.
எம்ஜிஆரால் அதிமுக தொடங்கப்பட்டு 48 ஆண்டுகள் நிறைவடைந்து, அக்டோபா் 17-ஆம் தேதி 49-ஆவது ஆண்டில் அடி எடுத்துவைத்துள்ளது. இதையடுத்து, சேலம் மாவட்டத்தில் இருக்கும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, தனது சொந்த ஊரில் அதிமுக கொடியை ஏற்றி வைத்தார்.
ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்த துணை முதல்வரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீா்செல்வம் கட்சிக் கொடியை ஏற்றிவைத்து இனிப்புகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தலைமைக்கழக நிா்வாகிகள், அமைச்சா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்பட அனைத்து அணியின் நிா்வாகிகளும் பங்கேற்றனர்.