நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

ஜன. 8 முதல் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தடுப்பூசி ஒத்திகை: ராதாகிருஷ்ணன்

ஜனவரி 8 ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :6 ஜனவரி 2021, 12:00 pm IST

ஜனவரி 8 ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், கோவை, நீலகிரி, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது. இன்னும் 10 நாள்களுக்குள் கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. 

இந்நிலையில் தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது: 

தமிழகத்தில் தற்போது 5 மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் நிலையில், வருகிற ஜனவரி 8 ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும். இதற்காக 33 லட்சம் கரோனா தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. நாளை 45 இடங்களுக்கு அனுப்பப்படவுள்ளன. 18 வயது மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும். நாள் ஒன்றுக்கு ஒரு மையத்தில் 100 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

சுமார் 2 கோடி தடுப்பூசிகளை பதப்படுத்தி வைக்க சென்னை மத்திய மருந்து சேமிப்புக் கிடங்கில் வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகளைத் தடுக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.