நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

வாழப்பாடி பகுதியில் நெல் அறுவடையில் விவசாயிகள் மும்முரம்

சேலம் மாவட்டம், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகளவில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள்

News image

வாழப்பாடி அருகே அறுவடைக்கு தயராக விளைந்து கிடக்கும் நெற்பயிர்கள்.

Updated On :6 ஜனவரி 2021, 12:59 pm IST


வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகளவில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், தற்போது அறுவடை செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.  

சேலம் மாவட்டம் வாழப்பாடி, பேளூர், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், கருமந்துறை, தும்பல், அயோத்தியாபட்டணம்,  குப்பனுார், கூட்டாத்துப்பட்டி,உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளாக நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் உயரும் அளவிற்கு போதிய பொழிவு இல்லை. இதனால் விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் வறண்டு கிடந்ததால், நன்செய் நிலங்களிலும் அதிக நீர்ப்பாசனம் தேவைப்படும் நெல், வாழை, கரும்பு ஆகியவற்றை பயிரிட முடியாத நிலை ஏற்பட்டது. மழையை நம்பி மானாவாரியாக விளையும் புன்செய் பயிர்களை  மட்டுமே விவசாயிகள் பயிரிட்டு வந்தனர்.

இந்நிலையில், கடந்த 4 மாதங்களாவே இப்பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, வறண்டு கிடந்த விவசாய கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளிலும் நீர்செறிவு ஏற்பட்டது.

Story image

காரிப்பட்டி அருகே அறுவடை செய்த நெல்லை உலர்த்தி தரம் பிரித்து மூட்டை பிடிக்கும் விவசாய குடும்பத்தினர்.

இதனையடுத்து, 3 ஆண்டுகளுக்கு பிறகு, பெரும்பாலான நன்செய் விவசாயிகள், கிணற்றுப் பாசன முறையில், மிகுந்த ஆர்வத்தோடு நெல் பயிரிட்டனர். இதனால், இப்பகுதியில் 3 ஆண்டுக்கு பிறகு நெல் சாகுபடி பரப்பளவு மும்மடங்கு அதிகரித்தது.

3 மாதங்களுக்கு முன் பயிரிடப்பட்ட நெற்கதிர்கள் முற்றி, தற்போது அறுவடைக்கு தயாரானதால், நெல் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் மும்முராக ஈடுபட்டுள்ளனர். 

விவசாய கூலித்தொழிலாளர்களை கொண்டு பாரம்பரிய முறையிலும், நவீன நெல் அறுவடை இயந்திரங்களை பயன்படுத்தியும், நெல் அறுவடை செய்யும் பெரும்பாலான விவசாயிகள், நெல்லை விற்பனை செய்யாமல் , உலர்த்தி தரம் பிரித்து,  உணவு மற்றும் விதை  தேவைக்காக சேமித்து வைத்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

இதுகுறித்து  இடையப்பட்டி விவசாயி மகாலட்சுமி கூறியதாவது:
3 ஆண்டுக்கு பிறகு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிணற்றில் தண்ணீர் ஊறியதால் நெல் பயிரிட்டோம். மூன்று மாதத்திற்கு பிறகு நெல் அறுவடை செய்துள்ளோம். இந்த நெல்லை விற்பனை செய்யாமல் உலர்த்தி தரம் பிரித்து உணவு மற்றும் விதை தேவைக்காக வீட்டிலேயே இருப்பு வைத்துக் கொண்டோம்‘ என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.