நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

சென்னையில் இடைவெளி விடாமல் பெய்த மழை: முழு விவரம்

சென்னையில் நேற்று நள்ளிரவில் பெய்யத் தொடங்கிய மழை, நாள் முழுவதும் தொடர்ந்து நின்று நிதானமாகப் பெய்தது. இதனால் நகரமே வெள்ளக்காடாக மாறியது.

News image

சென்னையில் இடைவெளி விடாமல் பெய்த மழை: முழு விவரம்

Updated On :6 ஜனவரி 2021, 11:44 am IST


சென்னை: சென்னையில் நேற்று நள்ளிரவில் பெய்யத் தொடங்கிய மழை, நாள் முழுவதும் தொடர்ந்து நின்று நிதானமாகப் பெய்தது. இதனால் நகரமே வெள்ளக்காடாக மாறியது.

ஜனவரி மாதத்தில் இப்படி மழை பெய்கிறதே என்று சென்னைவாசிகள் ஆச்சரியப்படும் அளவுக்கு நேற்று இடைவெளி விடாமல் மழை பெய்து கொண்டே இருந்தது.

தொடர்ந்து மழை பெய்ததால், தண்ணீர் தேங்காத சாலைகளில் கூட மழைநீர் சூழ்ந்து கொண்டது. போக்கிடம் இல்லாததால் எங்கு செல்வது என்று தெரியாமல் மழை நீர் சாலைகளில் சிக்கித் தவித்தது.

எவ்வளவு வெயிலையும் தாங்கும் சென்னைவாசிகளால், ஒரு சொட்டு மழை நீர் மண்ணில் விழுந்தால் கூட, நகரத்துக்குள் கால் வைக்க பயப்படும் சூழலே இதுவரை நீடிக்கிறது. ஒன்று சாலைகளில் தேங்கும் தண்ணீரும், காலைவாரக் காத்திருக்கும் குண்டு குழிகளும்.

சரி நேரடியாக விஷயத்துக்கு வரலாம். நேற்று சென்னையில் ஒட்டுமொத்தமாக 1353.60 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இன்று காலை 9 மணியுடன்  நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிண்டியில் 162.20 மி.மீ. மழையும் மாம்பலத்தில் 149.20 மி.மீ. மழையும் சோளிங்கநல்லூரில் 139 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

இதற்கடுத்து, மைலாப்பூரில் 138 மி.மீ. மழையும் அயனாவரத்தில் 128.20 மி.மீ. மழையும் பெரம்பூரில் 119 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.