நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

வேளாண் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மறியல் முயற்சி: சிஐடியுவினர்-காவலர்களிடையே தள்ளுமுள்ளு

வேளாண் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி திருப்பூரில் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சிஐடியு தொழிற்சங்கத்தினருக்கும் காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image

வேளாண் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மறியல் முயற்சி

Updated On :6 ஜனவரி 2021, 2:56 pm IST

அவிநாசி: வேளாண் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி திருப்பூரில் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சிஐடியு தொழிற்சங்கத்தினருக்கும் காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய அரசின் தொழிளார்கள் திருத்த சட்டங்கள், வேளாண் சட்டத் திருத்த மசோதா உள்ளிட்டவை திரும்பப்பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் ரயில் நிலையம் குமரன் நினைவகம் முன் சிஐடியு தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். 

இதையறிந்து அப்பகுதியில் முன் கூட்டியே ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். இருப்பினும் சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் தலைமையில், மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், 70க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சிஐடியுவினர் குமரன் நினைவகம் முன் ஒன்று திரண்டனர். பிறகு முறைசாரா தொழிலாளர் நல வாரியங்களை முறையாகச் செயல்படுத்த வேண்டும், காரோனா கால பாதிப்பில் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை கூறி கோஷமிட்டனர். 

இதைத் தொடர்ந்து வடக்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் மறியலில் ஈடுபடவதற்காக ஊர்வலமாகப் புறப்பட்டனர். அப்போது அங்கிருந்த காவல் துறையினர் தடுப்பரண்கள் ஏற்படுத்தி தடுத்து நிறுத்தினர். இதனால் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சிஐடியுவினர், காவலர்களுக்கும் இடையே தள்ளு முள்ள ஏற்பட்டது. 

இதையடுத்து மறியலில் ஈடுபட முயன்ற 70 பெண்கள் உள்பட 150க்கும் மேற்பட்டோரை காவலர்கள் கைது செய்தனர். இதனால் திருப்பூர் ரயில் நிலையம் முன் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பிற்குள்ளாகி, பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.