தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!விஜய்க்கு ஆதரவு? சில மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் 1.85 கோடிக்கு பருத்தி விற்பனை

எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில், சனிக்கிழமை அன்று நடைபெற்ற பொது ஏலத்தில், 7000 பருத்தி மூட்டைகள் ரூ.1 கோடியே 85 லட்சத்திற்கு விற்பனையானது.  

News image

கொங்கணாபுரம் கூட்டுறவு ஏலமையத்தில் சனிக்கிழமை அன்று விற்பனைக்கு வந்த பருத்தி மூட்டைகள்

Updated On :9 ஜனவரி 2021, 6:27 pm IST

எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில், சனிக்கிழமை அன்று நடைபெற்ற பொது ஏலத்தில், 7000 பருத்தி மூட்டைகள் ரூ.1 கோடியே 85 லட்சத்திற்கு விற்பனையானது.  

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியில் இயங்கிவரும் கூட்டுறவு ஏலமையத்தில், மாநிலத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வகை தரும் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்திகளை, இங்கு நடைபெறும் பொது ஏலத்தின் மூலம் விற்பனை செய்து வருகின்றனர்.  கடந்த சில வாரங்களாக மாநிலம் முழுவதும் பருத்தி அறுவடை அதிகரித்துள்ள நிலையில், இம்மையத்தில் விற்பனைக்கு வரும் பருத்தியின் வரத்து சற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை அன்று நாள் முழுதும் நடைபெற்ற பொதுஏலத்தில் ரூ. 1கோடியே 85 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனை செய்யப்பட்டது.  

சனிக்கிழமை அன்று கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் நடைபெற்ற பொது ஏலத்திற்க்கு வந்திருந்த 7000 பருத்தி மூட்டைகள் 1250 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு, வேளாண் விற்பனை மைய அலுவலர்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது. இதில் பி.டி ரக பருத்தியானது குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 5469 முதல் ரூ.6499 வரை விலைபோனது.  அதேபோல் டி.சி.ஹச் ரக பருத்தியானது. குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7160 முதல் ரூ.7926 வரை விலைபோனது. 

நாள் முழுதும் நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ.1.85 கோடிக்கு  பருத்தி வணிகம் நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு  பகுதிகளைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட மொத்த வியாபாரிகள் ஏலத்தில் பங்குகொண்டு, பருத்தியினை மொத்த கொள்முதல் செய்தனர். நிகழ் வாரத்தில் பருத்தி விலையானது கடந்தவாரத்தினை விட குவிண்டாலுக்கு ரூ.200 முதல் 500 வரை விலை உயர்வு கண்டுள்ளதாகவும், இதனால் தங்களுக்குக் கூடுதல் வருமானம் கிடைத்துள்ளதாகப் பருத்தி விவசாயிகள் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.