கோவை: பொள்ளாச்சி செல்ல விடாமல் காவலர்கள் தடுத்து நிறுத்தியதால், கோவை அருகே கனிமொழி எம்.பி தலைமையில் காவல் துறையினரை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அதிமுகவினர் உள்பட அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்தும் 10 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொள்ளாச்சியில் திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ,பொள்ளாச்சி செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை கோவையில் இருந்து காரில், கட்சி நிர்வாகிகளுடன் கனிமொழி சென்று கொண்டிருந்தார். அப்போது ஈச்சனாரி, கற்பகம் கல்லூரி அருகே கனிமொழியின் காரை தடுத்து நிறுத்திய காவல் துறையினர், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க பொள்ளாச்சி செல்ல விடாமல் தடுத்தனர். இதனால், காவல் துறையினருக்கும், திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து கோவை - பொள்ளாச்சி சாலை கற்பகம் கல்லூரி அருகே கனிமொழி தலைமையில் கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தென்றல் செல்வராஜ் உள்பட 50 க்கும் மேற்பட்ட திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் காதல் தம்பதி சடலங்கள்: போலீசார் விசாரணை

தேசிய மனநலம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு பல்வேறு பணிகள்

புதுக்கோட்டை: கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல இன்றுமுதல் தடை; மீறினால் நடவடிக்கை






